இலங்கைக்கு அருகே இரு தாழமுக்கம்

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட காற்று சுழற்சியானது தற்போது இலங்கையின் தெற்காக நிலைகொண்டுள்ளதால், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றையதினம் அசாதாரண காலநிலை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

இந்த காற்று சுழற்சி காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை
மாவட்டங்களில் இன்றையதினம் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை நாளையதினம் வரை தொடரும் வாய்ப்புள்ளது.

இதேவேளை எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதியளவில் மேலும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கையை நெருங்கி வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணத்தினாலும் இக்காலப் பகுதிகளில் ஓரளவு மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews