
நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த நபரின் மகன் நேற்றைய தினம் வீட்டிற்கு வந்துள்ளார்
வீட்டின் அறைக்குள் சென்றபோது தந்தை உருக்குலைந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
மகன் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .