களத்தில் இறங்கிய இராணுவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும் எனவும் அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கபடவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.

எமது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு வந்து பாதிப்புகளை பதிய வேண்டும். விவரங்களை அப்போது அவர்களுக்குரிய விவசாய காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் ராணுவத்தினரின் உதவியுடன் மாணவர்கள் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

வாகரைப் பிரதேசத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி புரிந்துள்ளனர் வெள்ள அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளை செய்ய தயாரான நிலையில் உள்ளனர் எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்கானப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews