
திருக்கோணமலை மாவட்டத்தில் இருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவாகிய, தந்தையை இழந்த 65 மாணவர்களுக்கு படிப்பைத் தொடர முதல் கட்டமாக மூன்று மாதகால நிதியுதவியை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தால் இன்று வழங்கப்பட்டது .
திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத் தலைவர் திரு.சண்முகம் குகதாசன், துணைத் தலைவர் மரு.நாகரத்தினம் சரவணபவன், பொருளாளர் திரு. இராசரத்தினம் கோகுலதாசன் ஆகியோர் இதற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
இதற்கான நிதி உதவியைக் கனடாவில் உள்ள திருகோணமலை நலன்புரிச் சங்கம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.