சுமந்திரனின் வார்த்தை பிரயோகங்களே தமிழரசு கட்சியின் சாபக்கேடு

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வார்த்தைப் பிரயோகங்களும், விமர்சனங்களும் தான் தமிழரசுக் கட்சிக்கு சாபக் கேடாக அமைந்ததாக மூத்த ஊடகவியலாளரும் தமிழரசுக் கட்சியின் நீண்ட நாள் உறுப்பினருமான திருமலை நவம் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சுமந்திரனுக்கு எதிரான பல்வேறு போராட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், விடுதலைப் புலிகளின் தியாகத்தை நாங்கள் மதிக்காமல், அவர்களின் வரலாற்றை நாங்கள் எழுதாமல் அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியாது எனவும் விடுதலைப் போராட்டத்தை தவிர்த்து அரசியல் போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews