பேருந்துடன், மோட்டார் சைக்கிள் மோதி பாரிய விபத்து!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து, சிலாவத்தை சந்திக்கு அண்மித்த போது, பிரதான வீதிக்கு செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கள்ளப்பாடு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews