யாழ் நல்லூர் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி சங்கரி பலி!!

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியான ஒரு பிள்ளையின் தாயான சங்கரி மகாலிங்கசிவக்குருக்கள் பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சல் வெகு தீவிர நிலையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறித்த காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் நிரம்பி வழிகின்றனர். உயிரிழப்புக்களும் அதிகமாகிக் கொண்டிருக்கிறன.எனவே மக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புற இடங்களில் நுளம்பு பெருகும் இடங்களை அழித்து பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews