52 ஆவது ஆண்டை முன்னிட்டு உரும்பிராய் யோகபுரத்தில் 52பானையில் பொங்கல்

உரும்பிராய் தெற்கு யோகபுரம் எனும் கிராமத்தில் அண்ண ஸ்ரார் விளையாட்டு கழகம்,அண்ணா ஸ்ரார் சனசமூக நிலையம் தமது 52 ஆவது ஆண்டை முன்னிட்டும் பொங்கல் விழாவினையும் சேர்த்து 52 பானையில் பொங்கல் விழாவினை அண்ணா ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் நிகழ்த்தியிருந்தார்கள்.

இதில் பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட கலசார அலுவலர் கி.கிருஸ்ணாகுமாரும் கௌரவ விருந்தினராக வலிகிழக்கு பிரதேச செயலக விளையாட்டு அலுவலர் ஜிவிந்தன் அவர்களும், கந்து சிறப்பித்தார்கள்.

சனசமூக தலவர், ரவினராஜ், விளையாட்டு கழக தலைவர் துசி ஆகியோர் இணைந்து தலைமை தாங்கி பாரம்பரிய விளையாட்டுக்களுடன் இந்த நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த இடத்தில் இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என பங்காளிகளாக கூட்டாக இந்த நிகழ்வை எல்லோரும் இணைந்து நடாத்தியிருந்தார்கள்.

முட்டி உடைத்தல், தலையணை சண்டை, கால்பந்து இறுதிப்போட்டி, கிளிக்கோடு மாலை கட்டுதல் என பல விளையாட்டுக்கள் நிகழ்த்தப்பட்டன.

Recommended For You

About the Author: Editor Elukainews