வெற்றிலைக்கேணியில் நாள் தொழில்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் இந்த வருடத்திற்கான நாள் தொழில் இன்று கடலில் இறக்கப்பட்டது.

வருட திருப்பலியின் போது குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட பர்னாந்து ஜெயசீலன் என்பவர் பங்கு மக்கள் சார்பாக இன்று நாள் தொழிலை மேற்கொண்டார்.

குறித்த நிகழ்வில் பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார்,
புனித அந்தோனியார் கடற்றொழிளாளர் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் சங்க அங்கத்தவர்கள் தொழிலாளர்கள் பங்கு மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews