அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு…!

முல்லைத்தீவு- அளம்பில் மாவீரர் துயிலுமில்ல காணியை தனிநபரிடமிருந்து இராணுவத்துக்கு சுபீகரிப்பதற்கான நில அளவீட்டு பணி இன்று(18) இடம்பெறவிருந்த நிலையில் பொதுமக்களால் அளவீட்டு பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் துயிலும் இல்ல காணிக்கு சென்றபோது அங்கு கூடிய பொதுமக்கள் இந்த இடத்தில் நாம் எமது உறவுகளை புதைத்துள்ளோம்.

இந்த காணியை அளவிட அனுமதிக்கமுடியாது என தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் அளவீட்டு பணிகள் நிறுத்தப்பட்டன.

குறித்த இடத்தில் பொதுமக்கள், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்ப்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews