கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்

இந்திய மீனவரின் சடலம் ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளது.

குறித்த சடலம் தெப்பம் ஒன்றில் மிதந்து வந்த நிலையில் கரை ஒதுங்கியதுடன்,இதில் உள்ள கான்களில் இந்தியாவின் தெலுங்கு மொழிகள் எழுதப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன.

குறித்த சடலம் கரை ஒதுங்கியுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸார் சடலத்தினை மீட்பதற்காக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்து நீதிபதியை அழைத்து, பரிசோதனையின் பின் சடலத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

குறித்த சடலமானது, இராணுவத்தினரின் முகாமுக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews