
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.