பொலிசாருக்கு திடீரென பறந்த உத்தரவு

போக்குவரத்துச் சோதனைகளை சிவில் உடையில் மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் உடலுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்ததோடு
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சம்பவத்தில் உயிரிழந்த 41 வயதுடைய ரொஷான் குமாரதிலக்கவின் வீட்டிற்கு நிவாரணம் வழங்குவதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் இன்று காலை குறித்த இடத்திற்கு சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews