அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆறுபேர்

காசோலையை வழங்கி 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 3 பெண்கள் உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24, 30 மற்றும் 36 வயதுடைய பேருவளை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 3 ஆண்களும்,
25, 43 மற்றும் 53 வயதுடைய யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 3 பெண்களுமாவர்.

சந்தேக நபர்கள் 15 மாணிக்கக் கற்களை கொள்வனவு செய்து அதற்கான தொகையாக 28,750,000 ரூபாவை பணமாக வழங்குவதற்கு மாறாக காசோலை மூலம் வழங்கியுள்ளனர்.

ஆனால் வழங்கப்பட்ட காசோலைக்கான பணம் உரிய வங்கிக்கணக்கில் இருந்திருக்கவில்லை.

இதையடுத்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த 6 பேரையும் பண மோசடி குற்றச்சாட்டில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews