மைத்திரியின் மகள் வீட்டில் சிக்கல்…!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்தரமுல்லவின் விக்ரமசிங்க புர இரண்டு மாடி வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் அலமாரியில் இருந்த 1,50,000 ரூபா மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் வாட்ச், 8 தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பள்ளி புத்தகப் பை ஆகியவை திருடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளின் கணவர் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, ​​வீடு திருடர்களால் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews