பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு மேற்கு பகுதியில் வீடு கையளிப்பு!

பரததர்சனா அறப்பணி நிதியத்தினால் மட்டக்களப்பு – மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நெடுஞ்சேனை கிராமத்தில் இன்றையதினம் குடும்பம் ஒன்றுக்கு வீடு கையளிக்கப்பட்டது.

பகிரதன் குடும்பத்தினரின் அனுசரணையில் அமைக்கப்பட்ட குறித்த வீட்டை மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

இன்றைய வீடு கையளிக்கும் நிகழ்வில் பரததர்சனா அறப்பணி நிதிய தலைவர் த.கேசவநாதன், செயலாளர் வ.திலீபன் மற்றும் அறப்பணியாளர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

Recommended For You

About the Author: Editor Elukainews