கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் கையளிப்போம்

வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல அனைத்து மாகாணங்களிலும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலயத்தின் மைதானம் இராணுவத்தினர் வசமிருப்பதாக தெரிவித்ததை அடுத்தே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறினார்.

வடக்கு, கிழக்கில் மாத்திரம் இராணுவ முகாம்கள் இருப்பதாக சாணக்கியன் முன்வைக்கும் கருத்தை நிராகரிக்கிறேன்.

தற்போது இராணுவத்தினரிடம் 7,379 ஏக்கர் காணிகளே உள்ளன.

இவற்றில் 37.8 ஏக்கர் மட்டுமே தனியார் காணிகளாக உள்ளன. 7342 ஏக்கர் அரச காணிகளாகும்.

தனியார் காணியில் 8 ஏக்கர் காணியை இந்த வருடத்தில் மீள கையளிப்போம். இதில் இனவாதத்தை இணைக்க வேண்டாம் என்று கோருகின்றேன் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews