தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர்

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை பதிவாகியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் என தெரியவருகின்றது.

மட்டக்களப்பு – குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் நாவலடி பகுதியில் திருமணமாகி வசித்து வந்துள்ளதோடு இவர் இன்று குறித்த பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தமைக்கான காரணம் வெளிவராத நிலையில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews