இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தல்

இலங்கை மீனவர்கள் சிலர் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சீஷெல்ஸ் நாட்டை அண்மித்த வடக்கு கடற்பரப்பில், இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கை மீனவர்கள் 6 பேரை ஏற்றிச்சென்ற நீண்டநாள் மீன்பிடி படகொன்று சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளதாக கடற்படை தெரிவித்தது.

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள படகு, அண்மையில் திக்கோவிட்ட துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்காக சென்றதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews