நான்கு வீடுகளை அமைத்து திறந்துவைத்த தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானம்…!

தெல்லிப்பழை துா்க்காதேவி தேவஸ்தானம் சமயப் பணிகளுடன் இணைந்ததான சமூகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு கட்டமாக  4 வீடுகளும்  இன்று (28.01.2024 – ஞாயிறு) காலை 8.30 மணியளவில்  திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள் எடுத்துச்செல்லப்பட்டு வீடுகள் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த வீடுகள் துர்க்காபுரம் மகளிர் இல்ல பெண் பிள்ளைகளுக்கு சீதனமாக வழங்கப்படவுள்ளதுடன் ,   2010 ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத் திட்டத்தினூடாக ஏற்கனவே  ஆலயத்தால்  9 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews