கொழும்பை நோக்கி அணி திரளும் ஐம்பதாயிரம் பேர்-நாளை வெடிக்கவுள்ள போராட்டம்

நாளை வீதியில் இறங்கி தற்போதைய அரசாங்கத்தை அகற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி நாளை வீதியில் இறங்குவம்.

பொலிஸ்மா அதிபரும் வேறு எவரும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.

ஆனால் அனைத்து சட்டங்களையும் மீறி நாளை கொழும்பிற்கு 50,000 பேரை கொண்டுவருவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

2022 ம் ஆண்டு நாங்களே மக்களின் எழுச்சியை ஆரம்பித்து வைத்தோம். இம்முறையும் அதனை செய்ய எண்ணியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews