தடை உத்தரவையும் மீறி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்

தடை உத்தரவையும் மீறி சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் ஆரம்பமானது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் ஆரம்பமானது.

இரணைமடு சந்தியில் தற்போது ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் கிளிநொச்சி நகர் நோக்கி A9 வீதி ஊடாக நகர்ந்து வருகிறது.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews