வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வும் மரநடுகையும்

இன்று இலங்கையின் 76ஆவது சுதந்திரதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது.

அதன் அடிப்படையில் இன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் கொண்டாடப்பட்டது.

காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசிய கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் பிரதேச செயலாளர்,கணக்காளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரினால் மரநடுகையும் அலுவலக உத்தியோகத்தர்களால் சிரமதானம் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews