மாடியில் வேலை செய்த குடும்பஸ்தர் கீழே விழுந்து உயிரிழப்பு!

நேற்றையதினம் கொக்குவில் பகுதியில் 2வது மாடி கட்டிடத்தில் வேலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறி கீழே விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் இளவாலை – பெரியவிளான் பகுதியை சேர்ந்த சூசை சுதர்சன் (வயது 38) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்றையதினம் வேலை செய்துகொண்டிருந்தவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது அவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அறிக்கையில் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews