யாழில் தவளையுடன் ஐஸ் கிறீம்

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உள்ள விற்பனை நிலையத்தில் தவளையுடன் ஐஸ்கிறீம் வழங்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய சூழலில் உள்ள குளிர்பான விற்பனை நிலையமொன்றில் நேற்று (14.02.2024) ஐஸ்கிறீம் உட்கொள்ள சென்றவருக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த நபர் இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு தெரிவித்ததையடுத்து குளிர்பான விற்பனை நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews