கட்டைக்காட்டில் கரையொதுங்கிய மர்மக் கூட்டை JCB,உழவு இயந்திரம் கொண்டு அகற்றிய கடற்படை

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில்22.02.2024 வியாழக்கிழமை கரையொதுங்கிய இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரத்தை JCB,உழவு இயந்திரம் கொண்டு கடற்படையினர் அகற்றினர்.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற போது இதனை அவதானித்த கட்டைக்காடு மீனவர்கள்
தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவந்தனர்.

கரையில் இருந்து குறித்த கூடாரத்தை அப்புறப்படுத்தும் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் JCB,உழவு இயந்திரம் கொண்டு வெற்றிலைக்கேணி கடற்படையினர் அதனை இன்று23.02.2024 வெள்ளிக்கிழமை அகற்றியுள்ளனர்.

கடற்படையுடன் இணைந்து கட்டைக்காடு மீனவர்களும் கூடாரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews