நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சபரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை , மின்னல் தாக்கங்களினால் ஏற்பட கூடிய பாதிப்புகளில் இருந்து தம்மை காத்து கொள்ளுமாறும் பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews