
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மணல்காடு கடற்கரையில் 3 கிலோ கிராம் கேரள கஞ்சா கடந்த வெள்ளிக்கிழமை 01.03.2024 கடற்படையால் மீட்கப்பட்டது
வழமையான ரோந்து நடவடிக்கையின் போது புதருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
மீட்கப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி ஒரு மில்லியன் ரூபாய் எனவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது
மீட்கப்பட்ட கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
