
புதிதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராக கடமையேற்ற சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் சந்தித்தார்.

இச் சந்திப்பில் சமய ரீதியான தற்போதைய நிலைமைகள், மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் சமய நிகழ்வுகள், இளைய சமூதாயத்தினால் மாறிவரும் சமய புறழ்வான பழக்கவழக்கங்கள், எதிர்காலத்தில் சமய சித்தார்த்தம் தொடர்பான விடையம் பற்றி சமயத் தலைவர்களினால் கலந்துரையாடப்பட்டன.
இதில் சிவபூமி அறக்கட்டளை நிலைய ஸ்தாபகர் ஆறுதிருமுருகன், இந்திய தூதர அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.