இலங்கை விமானப்படையின் சாகச நிகழ்வுகள் நாளை ஆரம்பம்

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி முதல் இரவு 11 மணிரை இந்த கண்காட்சி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில் ஆளில்லா விமானங்கள், விமானப்படையின் தளபாடங்கள், ஹெலிகாப்டர்கர்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் இந்த கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையி முடியும் என்பதுடன் ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிட முடியும்.

Recommended For You

About the Author: Editor Elukainews