
யாழ். எழுதுமட்டுவாழ் பகுதியில் இராணுவ வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிபப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.
இந் நிலையில் படுகாயமடைந்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர் 60 வயதான சிதம்பரப்பிள்ளை வசந்தாதேவி எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.