ஓட்டோ மோதி 12 வயது சிறுவன் பரிதாபமாக பலி..!

வீதியில் சைக்கிளில் சென்ற 12 வயது சிறுவன் மீது பின்னால் வந்த ஓட்டோ மோதியதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்தார்.

இந்தப் பரிதாபச் சம்பவம் கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

வீட்டிலிருந்து 400 மீற்றர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் பொருட்கள் வாங்கச் சென்ற சிறுவனே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஓட்டோவின் சாரதியைக் கைது செய்த பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews