
தியதலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் அறை ஒன்றில் பெண் ஒருவருடன் தங்கியிருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் குறித்த பௌத்த பிக்குவை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பௌத்த பிக்கு பொரளந்த பகுதியில் அமைந்துள்ள விஹாரையொன்றைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
46 வயதான பௌத்த பிக்கு, 40 வயதான பெண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமானவர் எனவும், பெண் ஒருவருடன் பௌத்த பிக்கு ஹோட்டல் அறையில் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்