சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கம் -இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம்..!!

சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதனால், இன்று (07) நண்பகல் 12:12 மணியளவில் கடவத்தை, பதுளை, லுணுகலை, கொங்கஸ்பிட்டிய, பக்மிட்டியாவ மற்றும் கொத்மலை ஆகிய பிரதேசங்களில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (07) பிற்பகல். 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதேநேரம், மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews