![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/1713782630-Usa-1-750x375-1.jpg)
இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கிடையிலான பயிற்சி நடவடிக்கை திருகோணமலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான ஒத்துழைப்பு பயிற்சி என பெயரிடப்பட்டுள்ள குறித்த பயிற்சி நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பினை பேணுதல், பிராந்தியத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்தல் உள்ளிட்ட நோக்கங்களுடன் ஐந்தாவது தடவையாக இருநாடுகளுக்கும் இடையிலான கடற்படை பயிற்சி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.