கிளிநொச்சியில் 1 கிலோ 760 கிராம் கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியான கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோவும் 760 கிராம் கஞ்சாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளும் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் பொலீஸ் விசேட அதிரடி கிடைத்த தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் விட்டு தப்பி சென்றுள்ளார்.
இதேபோன்று கிளிநொச்சி பொலீஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவளையடுத்து வீதியல் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவல் அடுத்து இரண்டு பேரையும் சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து  260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இரண்டு சந்தேகங்கள், கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நாளை நீதிமன்றில் முற்படுத்த உள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews