ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா பிரதமர் ரொபட் ஃபிகோ(Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரத்தில் உள்ள கலாச்சார மாளிகைக்கு வெளியேஇடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளதாகவும், சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews