மீண்டும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்படும் டயானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரித்தானிய பிரஜையாக இருந்த போது இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தமை தொடர்பான வழக்குகள் மற்றும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட குற்றவியல் விடயங்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுப்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews