இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!

20 மே 2024 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
தீவு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தீவின் மீது அவ்வப்போது (30-40) kmph வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனர்த்த முகாமைத்துவ பிரிவினை தொடர்புகொள்ள 117 ஐ அழைக்கவும் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews