நெடுந்தீவு, நைனாதீவு உட்பட கடற்போக்குவரத்து இன்று நிறுத்தம், வானிலை ஏச்சரிக்கை..!

வானிலையில் இன்று ஏற்படக்கூடிய மாற்றம் காரணமாக குறிகட்டுவானிலிருந்து இடம் பெறும் குறிகட்டுவான் நெடுந்தீவு, குறிகட்டுவான் நைனாதீவு உட்பட அனைத்து கடற் போக்குவரத்துக்கள் இடம் பெறாதென யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு.
2024 May 24 வளிமண்டல திணைக்களத்தின் பிப1.30 காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று (மே 24) காலை 05.30 மணியளவில் 15.0°N மற்றும் 88.4°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து 2024 மே 25 ஆம் தேதி காலை 05.30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக குவிய வாய்ப்புள்ளது டன் அதன்பிறகு, அது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக அதே பகுதியில் தீவிரமடையும் என்பதுடன்
மிக பலத்த காற்று (60-70) kmph, உடன் கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்புகருதி  நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவுகளுக்கான  கடற்போக்குவரத்துகள் நாளை இடம் பெறமாட்டாது.
யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா

Recommended For You

About the Author: Editor Elukainews