காணி உறுதியென பிரபாகரமூர்த்தி ஐயாவால் அழைத்து செல்லப்பட்ட முள்ளியான் மக்களுக்கு காணி உறுதி கிடைத்ததா?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் யாழிற்கு விஜயம் செய்துள்ளார்

இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் காணி உறுதி வழங்கப்பட போவதாக அழைத்து செல்லப்பட்ட மக்கள் பலருக்கு காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியான் கிராம அலுவலர் பிரிவில் இருந்து வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி ஐயாவால் அழைத்து செல்லப்பட்ட எவருக்கும் காணி உறுதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கீழ்காணும் பெயர் விபரங்களை உடைய மக்கள் காணி உறுதியை எதிர்பார்த்து சென்றிருந்த போதும் உறுதி இல்லாமல் வீடு வந்ததாக முள்ளியான் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

 

கூட்டத்திற்கு ஆள் சேர்க்கப்பட்டதா?இல்லை என்றால் எப்போது மிகுதி பேருக்கு காணி உறுதி கிடைக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர்

Recommended For You

About the Author: Editor Elukainews