30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது…!

30 லீற்றர் கசிப்பினை புத்தகப்பையில் எடுத்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அவர்களின் கீழ் இயங்கும் குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேக நபர் இன்று அதிகாலை யாழ் மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்  .
யாழ்ப்பாண குற்றத் தடுப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்  கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
முல்லைத்தீவு பகுதியில் இருந்து தனியார் பேரூந்தில் குறித்து நபர் கசிப்பினை பைகளில் கட்டி எடுத்து வந்துள்ளார். இவரை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆயராக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews