அமரர் சிவசிதம்பரம் அவர்களின் இல்லத்தில் இடம் பெற்ற 22 வது  நினைவேந்தல்…!

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், முனனாள் நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரம் அவர்களின் 22 ஆவது நினைவுதினம் கடந்த புதன்கிழமை  05/06/2024  கரவெட்டியில் பெரியதோட்டத்தில் அமைந்துள்ள  அவர்களது  இல்லத்தில்  காலை 8 30
மணியளவில் கரவெட்டி அபிவிருத்தி  ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன்  தலைவர் உபாலி எஸ்.பொன்னம்பலம் தலைமையில் இடம் பெற்றது.
இதில்  அமரர் சிவ சிதம்பரம் அவர்களோடு இணைந்து செயற்பட அரசியல்வாதிகளத, சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews