முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணி  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…!

கட்டைக்காடு றோ.க.த.க பாடசாலையில் முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணி  மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
யா. கட்டைக்காடு. றோ.க.த.க.பாடசாலையில் அதன் அதிபர் தலமையில்  நேற்று  12/06/2024 புதன்கிழமை இடம் பெற்றது.
முதலுதவி பயிற்சி பெற்ற முதலாம் அணியினருக்கு சான்றிதழ்களை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க யாழ் மாவட்ட பிரிவுத் தலைவர்
சங்கரப்பிள்ளை திரவியராசா வழங்கிவைத்தார்.
இதே வேளை  இரண்டாம் முதலுதவி பயிற்சி பெறுவதற்கு இரண்டாம்  அணியினரும் இன்று தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வில் செஞ்சிலுவை சங்க யாழ் மாவட்டப்பிரிவு தலைவர், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: Editor Elukainews