இஸ்ரேல் ஹமாஸ் போரில் 20,000 குழந்தைகள் பலி – 21,000 குழந்தைகளைக் காணவில்லை

 

காஸா போரின் நிலவரங்களை இஸ்ரேலும்,ஹமாஸும் தாக்குதல் நடைபெற்ற உடனே சேத‌ம், இறப்பு, காயம் போன்ற விபரங்களை அறிவித்து தங்கள் தரப்பில் இறந்தவர்களின் தொகை காயமடைந்தவர்களின் தொகை விபரம் என்பன உலகச் செய்திகளில் முதலிடம் பிடிக்கின்றன. காசா போரில் 20,000 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 21,000 குழந்தைகள் காணமல் போனதகவும் வெளியான செய்தி உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஸா போரில் 20,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் புதைக்கப்பட்டனர், சிலர் சிக்கியுள்ளனர்,பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், அனேகமானோர் காணாமல் போயுள்ளனர்.

இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய பெரும் எண்ணிக்கையிலானவர்கள், அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ளனர், இஸ்ரேல் குழந்தைகளைத் தடுத்து வைத்துள்ளது என்று சேவ் தி சில்ரன் கூறுகிறது.

காஸாவில் கிட்டத்தட்ட 21,000 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக பிரித்தானிய உதவிக் குழுவான சேவ் தி சில்ரன் கூறியுள்ளது.

திங்களன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், காணாமல் போன ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய குழந்தைகள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது, அடையாளம் தெரியாத கல்லறைகளில் புதைக்கப்பட்டது, வெடிபொருட்களால் அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது, இஸ்ரேலிய படைகளால் தடுத்து வைக்கப்பட்டது அல்லது மோதலில் இறந்தது என அறிக்கை கூறுகிறது

Recommended For You

About the Author: Editor Elukainews