யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து : மூவர் பலி

சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தி சாரதி மற்றும் இரு பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து ஒன்றுடன் பாரஊர்தி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, திருத்த வேலை மேற்கொள்ளப்பட்டிருந்த போதே, பார ஊர்தி, குறித்த பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின்போது சொகுசு பேருந்தின் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவரே உயிரிழந்தனர்.

இந்நிலையில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பேருந்தின் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews