வத்திராயனில்  மர்மமான முறையில்  தீக்காயங்களுக்கு  உள்ளானவர்  மரணம்…!

யாகவடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த  20.06.2024 இரவு எரியூட்டப்பட்ட நிலையில்   பொதுமக்களால் மீட்கப்பட்ட. மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிககப்பட்டிருந்த நிலையில் சிகி்ச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்
மரணமடைந்தவர்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளரும்,  வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்  முன்னாள் இயக்குனருமான சரவணபவானந்தன் சிவகுமார் (பவானி) எனும்  43 மருதங்கேணி சேர்ந்தவர் 44 வயதுடைய  3 பிள்ளைகளின் தந்தை ஆவார்.
குறித்த நபர் தீக்காயத்திற்க்கு உள்ளானது தொடர்பான காரணம் எதுவும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவுமில்லை, யாரும் கைது செய்யப்படவுமில்லை. அவரது சடலம் புரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews