ராஜபக்சக்களுடன் மீண்டும் இணையப்போவதில்லை…! 

ராஜபக்சக்களுடன் மீண்டும் இணையும் எண்ணம் தனக்கு இல்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

 

”மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பிரகாரம் விமல் வீரவன்ஸவுடன் பேச்சு நடத்தினேன். அவர் மொட்டுக் கூட்டணியுடன் இணைவார். வாசுதேவ நாணயக்காரவும் வருவார்” என ராஜபக்ச குடும்ப உறுப்பினரும், ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், தனக்கு அவ்வாறானதொரு எண்ணம் இல்லை, சர்வஜன அதிகாரத்துடன்தான் பயணம் தொடரும் என்று விமல் வீரவன்ஸ பதிலளித்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews