விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – டிப்பர் வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

துன்னாலை வடக்கை சேர்ந்த நாகராசா பாலச்சந்திரன் எனும்  39 வயதுடையவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானர்.

விபத்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக  சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறறுவந்த நிலையில் அவர் கடந்த 29/06/2024 அன்று சிகிச்சை பலனின்றி   உயிரிழந்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews