கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை…!

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றையதினம்(02) பாடசாலை நேரம் முடிந்ததும் பாடசாலைகளுக்கு முன்பாக ஆசிரியர் சங்கங்களின் ஏற்பாட்டில் தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தது

இந்நிலையில், தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால், பாடசாலை நேரத்தில் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து தொழிற்சங்கங்களையும் கொழும்பிற்கு அழைத்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews